search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலத்தகராறு - பாகூரில் பெண் மீது தாக்குதல்
    X

    நிலத்தகராறு - பாகூரில் பெண் மீது தாக்குதல்

    பாகூரில் நிலத்தகராறு காரணமாக பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.
    பாகூர்:

    பாகூர்பேட் புதுநகரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி அருள்மொழி (வயது 33). கூலித்தொழிலாளி.

    இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பக்கிரி. இருவரின் வீட்டு நிலம் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெயக்குமார் வீட்டு தோட்டத்தில் தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கிரி தனது நிலத்தில் தான் ஜெயக்குமார் தண்ணீர் பாய்ப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஜெயக்குமார், பக்கிரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பக்கிரி அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து ஜெயக்குமாரை தாக்க சென்றார். அப்போது மனைவி அருள்மொழி அதை தடுக்க முயன்றார். இதில் அருள்மொழி மீது அடி விழுந்தது. பலத்த காயம் அடைந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுபற்றி பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் பக்கிரியை கைது செய்யவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அருள்மொழியின் உறவினர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×