search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலுவலகம் நடத்துவதாக கூறி அடுக்கு மாடி குடியிருப்பில் சூதாட்டம் - 10 பேர் கைது
    X

    அலுவலகம் நடத்துவதாக கூறி அடுக்கு மாடி குடியிருப்பில் சூதாட்டம் - 10 பேர் கைது

    அலுவலகம் நடத்துவதாக கூறி அடுக்கு மாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உடனடியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட வடபழனியை சேர்ந்த சரவணன், ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 31 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் அலுவலகம் என்கிற பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஆட்களை வரவழைத்து சூதாட்டம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×