என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலுவலகம் நடத்துவதாக கூறி அடுக்கு மாடி குடியிருப்பில் சூதாட்டம் - 10 பேர் கைது
Byமாலை மலர்19 Jun 2019 8:41 AM GMT (Updated: 19 Jun 2019 8:41 AM GMT)
அலுவலகம் நடத்துவதாக கூறி அடுக்கு மாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட வடபழனியை சேர்ந்த சரவணன், ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 31 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் அலுவலகம் என்கிற பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஆட்களை வரவழைத்து சூதாட்டம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X