search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துடியலூரில் செல்போனில் சத்தமாக பேசிய வாலிபருக்கு கத்தி குத்து - 3 பேர் கைது
    X

    துடியலூரில் செல்போனில் சத்தமாக பேசிய வாலிபருக்கு கத்தி குத்து - 3 பேர் கைது

    துடியலூரில் செல்போனில் சத்தமாக பேசிய வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சரவணகுமார் (வயது27). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள எருக்கம்பெனியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தான் தங்கி இருந்த அறை முன்பு நின்று செல்போனில் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தார். இதனை கேட்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஜயகுமார், பூவியரசன், அருள்குமார் ஆகியோர் வந்து சத்தம் குறைவாக பேசுமாறு கூறினார்.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சரவணகுமாரின் வயிற்றில் குத்தினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சரவணகுமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான விஜய குமார், பூவியரசன், அருள் குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×