என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
துடியலூரில் செல்போனில் சத்தமாக பேசிய வாலிபருக்கு கத்தி குத்து - 3 பேர் கைது
கோவை:
மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சரவணகுமார் (வயது27). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள எருக்கம்பெனியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தான் தங்கி இருந்த அறை முன்பு நின்று செல்போனில் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தார். இதனை கேட்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஜயகுமார், பூவியரசன், அருள்குமார் ஆகியோர் வந்து சத்தம் குறைவாக பேசுமாறு கூறினார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சரவணகுமாரின் வயிற்றில் குத்தினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சரவணகுமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான விஜய குமார், பூவியரசன், அருள் குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்