search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே 11-ம்வகுப்பு மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்
    X

    கிருஷ்ணகிரி அருகே 11-ம்வகுப்பு மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்

    கிருஷ்ணகிரி அருகே 11-ம்வகுப்பு மாணவியை வாலிபர் திருமணம் செய்ய கடத்தி சென்று உள்ளார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவரை அவரது தாயார் ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்க்க கடந்த 12-ம் தேதி பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இவரது தாயார் பள்ளியின் உள்ளே இருந்தபோது, அந்த மாணவியை திடீரென காணவில்லை. 

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அக்கம்பக்கம் விசாரித்ததில், மாணவியை அதேபகுதியில் உள்ள  பாலிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெமினி என்பவரது மகன் பிரசாந்த் (வயது 19) என்பவர் திருமணம் செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×