search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது
    X

    ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது

    திருவள்ளூர் பஜார் விதியில் உள்ள ஓட்டலில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஜார் வீதியில் அசைவ ஓட்டல் நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். இந்த ஓட்டலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் கவின்குமாருக்கு புகார் வந்தது.

    அவரது உத்தரவுப்படி உணவு பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஓட்டலில் திடீர் ஆய்வு செய்தனர். இதற்கு ஓட்டல் உரிமையாளர் ராமகிருஷ்ணன், அவரது மகன் சத்யநாராயணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சுந்தர மூர்த்தியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் சுந்தர மூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம கிருஷ்ணன், அவரது மகன் சத்யநாராயணன் ஆகியோரை கைது செய்தனர்.
    Next Story
    ×