search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு அதிகாரி"

    • உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
    • தயாரிப்பு தேதி தெளிவாக இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவர் செந்தில் குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற் பனை செய்யும் வியாபாரி களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள வட்டாரம், நகராட்சிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள், நுகர்வோர்கள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இனிப்பு, காரவகைகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப் பட்டுள்ளது குறித்து நியமன அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-

    இனிப்பு பாக்சுகளை விற்பனை செய்யும் வணிகர்கள், அந்த பாக்ஸில் இனிப்பு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம் ஆகியவற்றை தவறா மல் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விபரங் களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைக்க வேண்டும். சமைப்ப தற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், தூய்மையாக பாது காக்கப்பட்ட தண்ணீ ராக இருக்கவேண்டும்.

    இனிப்பு காரவகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் நீரின் தரத்தினை அறி யும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொருட் களை சுத்தம் செய்ய வேண் டும். உணவு வியாபாரம் முடிந்தவுடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைத்தல் வேண்டும்.

    உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் அணிய வேண்டும். உணவு பொருட் களை கையாளுபவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், தொகுப்பு எண், தயாரிப்பா ளரின் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் ஆகி யவை லேபிளில் தெளி வாகத் தெரியும்படி அச்சி டப்பட வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விபர சீட்டு இடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலா வதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

    இனிப்பு மற்றும் கார வகைகளை பேக்கிங் செய்து நுகர்வோருக்கு கொடுக்கும் போது உணவு சேமிப்புக் குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன் களையே பயன்படுத்த வேண்டும்.

    பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது.

    பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்ட பங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் சில்லறை விற்பனை செய்யும் பொழுது காட்சிப்ப டுத்தப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயா ரிக்கப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும்.

    இனிப்பு, காரவகை உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர்கள், ஈக்கள் மொய்க்கும் வண் ணம் இனிப்பு, காரவகைகள் திறந்த நிலையில் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாங்கும் இனிப்பு மற்றும் கார வகை களுக்கு முறையான ரசீது பெற்றி ருத்தல் வேண்டும். அதிகப்படி யாக செயற்கை வண்ணங்கள் கொண்டு இனிப்பு பொருட் கள் தயாரிக்கப் பட்டிருந்தால் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முறையான விபரச்சீட்டு உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் அனை வரும் முறையான பயிற்சி களை பெற்றிருக்க வேண் டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் காரவகை பலகா ரங்களை வாங்கும் போது உணவுப்பாதுகாப்பு துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சிட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறை யின் வாட்ஸ் ஆப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணி லோ அல்லது உணவு பாது காப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண் 04652-276786 என்ற எண்ணிலோ புகார் தெரி விக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் வேளாண் உதவி இயக்குநர் வசந்தா, வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அன்றாட உணவில் அரிசி, கோதுமையை அதிக அளவு சேர்த்து கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகமாக கிடைக்கிறது. ஆனால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் காணப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் புதிய ரகங்களாக சோளம் கோ-32, கம்பு ரகங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதிக சத்துக்கள் , மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு கோடை உழவு, விதைநேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரம், நுண்ணுாட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். மேலும் உழவர் கடன் அட்டை குறித்து வேளாண் அலுவலர் சுனில்கவுசிக் பேசினார். முகாமில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விரிவான கையேடு, பேட்டரி தெளிப்பான், இடுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன. இதில் வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர்.
    • கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமின் அன்சாரி. நேற்று இரவு 8 மணியளவில் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் மட்டும் கடைக்கு வந்து திடீர் சோதனை நடத்தினார்.

    விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீது புகார் வந்திருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமின் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர். மீண்டும் சோதனையில் ஈடுபட்டதால் மனவேதனை அடைந்த தமின்அன்சாரி தனது குடும்பத்தினை கடைக்கு வரவழைத்து பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை கடையின் சுவரில் அதிகாரி ஒட்டிச் சென்றார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.
    • ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதி காரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் குழுவினர் குளிர்பா னகடைகள், பழக்கடைகள், பழச்சாறு, ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில்பெட்டிகள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.

    அப்போது கோடை காலத்தில் கடைபிடிக்க வே ண்டிய வழிமுறைகள்குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை கூறியதாவது:- குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள், தாங்கள்உபயோக ப்படுத்தும் ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.அதிக வண்ணங்களை குளிர்பானத்தில் சேர்க்க கூடாது. குளிர் பானம் தயாரிக்கும் இடம் சுத்தமா கவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்பவர்கள், தரமான பழங்களை பயன்படு த்துவதோடு, அதற்கு தேவையான தண்ணீர்,பால் போன்றவை தரமானதாக இருக்கவேண்டும்.பொதுமக்கள் குளிர்பானம், ஐஸ்கள்மலிவான விலையில்அதிக வண்ணங்களில் இருந்தால் அவற்றை உண்ணக்கூடாது. குளிர்பான பாட்டில்கள், உரிய லேபிள் விவரங்கள், தயாரிப்பு, காலாவதி தேதி அறிந்து பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோடைகாலம் முழுவதும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். விதிமீறும் உணவு வணிகர்கள் மீதுசட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும். உணவு தொடர்பா னபுகார்களை 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவித்துள்ளனர்.

    • உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஐகோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
    • ஊடகங்கள் மாறாக துறை ரீதியான புகைப்பட கலைஞர்களையோ, வீடியோ பதிவாளரையோ அழைத்துச் செல்லலாம்.

    சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் தங்கள் உணவகங்களின் பெயர் கெடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவக சோதனையின் போது ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கெட்டுப் போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதை விடுத்து முன்கூட்டியே ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவது தவறு என்றும் குறிப்பிட்டார்.

    இனி சோதனைக்கு செல்லும் போது ஊடகங்களை அழைத்துச் செல்லக்கூடாது, மாறாக துறை ரீதியான புகைப்பட கலைஞர்களையோ, வீடியோ பதிவாளரையோ அழைத்துச் செல்லலாம் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை வீடியோ எடுத்து வெளியிட தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியும், தமிழக அரசும் அக்டோபர் 17-ந்தேதிக்குள் பதில் மனு தாக்க செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

    ×