search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலி
    X

    பாபநாசத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலி

    பாபநாசத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே தென்கரை ஆலத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 22). லாரி டிரைவர். அதே கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (19). பி.காம். படித்தவர். சம்பவத்தன்று கதிரவன், மணிகண்டனை ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் வந்துகொண்டிருந்தனர். அப்போது பாபநாசம்- சாலியமங்கலம் மெயின் ரோட்டில் மின்சார வாரிய அலுவலகம் அருகே நாகலூரைச் சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரவன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

    இதுகுறித்து கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×