என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பிள்ளை அருகே, குடிநீர் கேட்டு 3-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்16 May 2019 6:18 PM GMT (Updated: 16 May 2019 6:18 PM GMT)
இளம்பிள்ளை அருகே குடிநீர் கேட்டு நேற்று 3-வது நாளாக காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் அந்த பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக இப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.
இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட முருகன் நகர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி குடிநீர் சரிவர கிடைக்கவில்லை எனவும், குடிநீர் வசதி செய்து தர வேண்டியும், நேற்று ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் இளம்பிள்ளை-சின்னப்பம்பட்டி சாலையில் புவன கணபதி கோவில் அருகே திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேரூராட்சி சார்பில், அப்பகுதி மக்களுக்கு உடனடியாக டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்தது.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதிகளில் அந்த பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக இப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.
இடங்கணசாலை பேரூராட்சிக்கு உட்பட்ட முருகன் நகர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி குடிநீர் சரிவர கிடைக்கவில்லை எனவும், குடிநீர் வசதி செய்து தர வேண்டியும், நேற்று ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் இளம்பிள்ளை-சின்னப்பம்பட்டி சாலையில் புவன கணபதி கோவில் அருகே திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேரூராட்சி சார்பில், அப்பகுதி மக்களுக்கு உடனடியாக டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X