என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற கணவர் - போலீசார் விசாரணை
Byமாலை மலர்14 May 2019 4:15 PM GMT (Updated: 14 May 2019 4:15 PM GMT)
தர்மபுரி அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கழத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இண்டூர்:
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வள்ளி (வயது37).
அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வள்ளிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கார்த்திக் தனது மனைவி வள்ளியை கண்டித்துள்ளார். ஆனால் கணவன் கண்டித்த பிறகும் வள்ளி கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்து வந்ததாக தெரிய வந்தது.
சம்பவத்தன்று வள்ளி ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருப்பதை கண்டு கார்த்திக் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து வள்ளியை மீண்டும் கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் வள்ளியின் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றார். இதனால் மூச்சு விட முடியாமல் வள்ளி திணறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கிழே விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து மயங்கிய நிலையில் கிடந்த வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இண்டூர் போலீசார் வள்ளியின் கணவர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வள்ளி (வயது37).
அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வள்ளிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கார்த்திக் தனது மனைவி வள்ளியை கண்டித்துள்ளார். ஆனால் கணவன் கண்டித்த பிறகும் வள்ளி கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்து வந்ததாக தெரிய வந்தது.
சம்பவத்தன்று வள்ளி ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருப்பதை கண்டு கார்த்திக் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து வள்ளியை மீண்டும் கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் வள்ளியின் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றார். இதனால் மூச்சு விட முடியாமல் வள்ளி திணறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கிழே விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து மயங்கிய நிலையில் கிடந்த வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இண்டூர் போலீசார் வள்ளியின் கணவர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X