search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவி கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற கணவர் - போலீசார் விசாரணை
    X

    மனைவி கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற கணவர் - போலீசார் விசாரணை

    தர்மபுரி அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கழத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வள்ளி (வயது37).

    அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் வள்ளிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கார்த்திக் தனது மனைவி வள்ளியை கண்டித்துள்ளார். ஆனால் கணவன் கண்டித்த பிறகும் வள்ளி கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்து வந்ததாக தெரிய வந்தது.

    சம்பவத்தன்று வள்ளி ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருப்பதை கண்டு கார்த்திக் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து வள்ளியை மீண்டும் கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று வீட்டில் வள்ளியின் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றார். இதனால் மூச்சு விட முடியாமல் வள்ளி திணறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கிழே விழுந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து மயங்கிய நிலையில் கிடந்த வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக இண்டூர் போலீசார் வள்ளியின் கணவர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×