search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் அரசு பஸ் மோதி பெண் பலி
    X

    திருப்பூரில் அரசு பஸ் மோதி பெண் பலி

    திருப்பூரில் கணவன் கண் முன்னே அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் அடுத்த நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மனைவி ராம்சீனா(24). சம்பவத்தன்று மாலை கணவன்-மனைவி இருவரும் மேட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி சென்று கொணடிருந்தனர்.

    காங்கேயம் ரோடு புதுப்பாளையம் அருகே சென்ற போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ராம்சீனா பஸ்சில் சிக்கி கொண்டார். அமானுல்லா அதிர்ஷ்டவசமாக தப்பினார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராம்சீனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×