என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: சேலத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்29 March 2019 11:49 AM GMT (Updated: 29 March 2019 11:49 AM GMT)
சேலம் அம்மாப்பேட்டையில் பிளஸ்-2 மாணவியிடம் தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் பாரதி நகரைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 22) என்பவர் மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். மேலும் மாணவியை பின்தொடர்ந்து சென்று அவர் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினர். ஆனால் அப்போதும் மாணவியின் வீட்டிற்கு சென்று அஜித்குமார் பெண் கேட்டார். வயது குறைவாக இருப்பதால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அவரது பெற்றோர் மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால் உன் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன மாணவியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்.
பின்னர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் பாரதி நகரைச் சேர்ந்த அஜித் குமார் (வயது 22) என்பவர் மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். மேலும் மாணவியை பின்தொடர்ந்து சென்று அவர் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினர். ஆனால் அப்போதும் மாணவியின் வீட்டிற்கு சென்று அஜித்குமார் பெண் கேட்டார். வயது குறைவாக இருப்பதால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அவரது பெற்றோர் மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால் உன் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன மாணவியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்.
பின்னர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X