என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 36 பேரிடம் ரூ.1 கோடி மோசடி - வாலிபர் கைது
Byமாலை மலர்22 March 2019 10:22 AM GMT (Updated: 22 March 2019 10:22 AM GMT)
நெல்லையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 36 பேரிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட மேலப்பாளையத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து சில கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பல லட்சம் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களிடம் முன்பணமாக லட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள்.
அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் இதுபோன்ற கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள். இதற்காக அந்த கும்பல் தனியாக ஏஜென்ஸி அமைத்து கைவரிசை காட்டி வருகிறது.
மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக அறிவித்தது. இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் அந்த நிறுவனத்தை அணுகினர். அந்த நிறுவனத்தினர் முன் பணமாக ஆயிரக்கணக்கில் வசூலித்தார்கள். அந்த வகையில் ரூ.1 கோடி வரை அந்த நிறுவனம் வசூல் செய்துள்ளது.
ஆனால் சொன்னபடி யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. யாருக்கும் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 36 பேர் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து சில கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பல லட்சம் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களிடம் முன்பணமாக லட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள்.
அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் இதுபோன்ற கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள். இதற்காக அந்த கும்பல் தனியாக ஏஜென்ஸி அமைத்து கைவரிசை காட்டி வருகிறது.
மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்ஸி நிறுவனம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக அறிவித்தது. இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் அந்த நிறுவனத்தை அணுகினர். அந்த நிறுவனத்தினர் முன் பணமாக ஆயிரக்கணக்கில் வசூலித்தார்கள். அந்த வகையில் ரூ.1 கோடி வரை அந்த நிறுவனம் வசூல் செய்துள்ளது.
ஆனால் சொன்னபடி யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. யாருக்கும் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 36 பேர் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X