என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் வெயிலுக்கு 2 பேர் பலி
நெல்லை:
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. நெல்லை, பாளை பகுதியில் அதிகபட்சமாக 103 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. நெடுஞ்சாலைகளில் கானல் நீரும் தென்படுகிறது.
பாளை ரஹ்மத் நகர் அருகே ஒரு தனியார் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் கட்டும்பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது பெயர் விபரம் தெரியவில்லை. சுமார் 40 வயதுள்ள அவர் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவர் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலத்தை சேர்ந்த 55 வயதான ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்து கொண்டிருந்தார். தற்போது வெயில் அதிகமாக அடித்ததால் நேற்று முன்தினம் அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
வெயில் கொடுமையில் இருந்து மீள தற்போது சாலை யோரங்களில் ஏராளமான குளிர்பான கடைகளும், பழ ஜூஸ் கடைகளும் வந்துள்ளன. தர்ப்பூசணி பழங்களும் ஏராளமாக சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளது. பகலில் வெளியே செல்லும் பயணிகள் தற்போது தர்ப்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்