search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான வாலிபர் ‘திடீர்’ மரணம்
    X

    அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான வாலிபர் ‘திடீர்’ மரணம்

    அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான வாலிபர் உடல்நிலை காரணமாக உயிரிழந்துள்ளார்.
    அம்பத்தூர்:

    அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மிரட்டி கற்பழித்தனர்.

    இது தொடர்பாக அயனாவரம் எஸ்.வி.எம். நகரைச் சேர்ந்த பாபு (வயது30) உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் தாக்கல் செய்தனர். கைதானவர்களுக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

    கைதான பாபுவுக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. இதற்காக அவரை கடந்த மாதம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக இறந்தார்.

    இறந்து போன பாபு இந்த வழக்கில் 10-வது குற்றவாளி ஆவார். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தவர்.

    இதுபற்றி புழல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×