என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணம் லாட்ஜில் சென்னை வாலிபர் மர்ம மரணம்
கும்பகோணம்:
சென்னை அம்பத்தூர் சிட்கோ நகரை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது41) என்பவர் கடந்த 22-ந்தேதி காலை கும்பகோணம் பஸ் நிலையம் அருகே ஜான் செல்வராஜ் நகரில் உள்ள தனியார் லாட்ஜில் வந்து தங்கி உள்ளார்.
அன்று மதியம் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்தார். பின்னர் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லையாம்.
நேற்று 24-ந்தேதி இரவு வரை அறையை விட்டு வெளியில் வராததால் கதவை தட்டியும் திறக்காததால் லாட்ஜ் உரிமையாளர் இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது துண்டு மட்டும் அணிந்த நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகில் மூச்சுத் திணறலுக்கு பயன்படுத்தும் மருந்து ஸ்பிரே கிடந்தது. அவரை உடைமைகளை பரிசோதித்ததில் அவர் சென்னையில் இருந்துதான் வந்து தங்கி இருந்தது தெரியவந்ததையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர் மூச்சுத் திணறலில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்