search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியரை மாற்றக்கோரி குடும்பத்தினருடன் சேர்ந்து தர்ணா நடத்திய வாலிபர்
    X

    ஆசிரியரை மாற்றக்கோரி குடும்பத்தினருடன் சேர்ந்து தர்ணா நடத்திய வாலிபர்

    போச்சம்பள்ளி அருகே சரியாக பாடம் சொல்லி தராத ஆசிரியரை மாற்றக்கோரி குடும்பத்தினருடன் சேர்ந்து வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்ம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி அடுத்துள்ள பழனம்பாடி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (30). இவருடை குழந்தைகள் பழனம்பாடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் பயின்று வருகிறார்கள். 

    பள்ளியில் உதவி ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சுமார் 19 ஆண்டுகளாக இப் பள்ளியில் பணியாற்றி வரும் இவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி தருவதில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் மனு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது நாள்வரை செந்தில் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது தெரியவந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதி நேற்று மாலை பள்ளியின் முன்பு தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக செந்தில் ஆசிரியரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பாரூர் போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட திருப்பதியை சமாதானம் செய்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 
    Next Story
    ×