search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
    X
    பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    கும்மிடிப்பூண்டியில் மேம்பால பணியை முடிக்க கோரி பாமகவினர் போராட்டம்

    கும்மிடிப்பூண்டியில் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பால பணி நடைபெற்று வருகிறது.

    ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், சிப்காட் தொழிலாளர்களும் பொது மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிக அளவில் விபத்துகளும் அப்பகுதியில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில துணை பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், சம்பத், ஜெகன், ஏழுமலை, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க. நிர்வாகிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மேம்பால பணியை விரைந்து முடிக்கக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×