search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK Struggle"

    கும்மிடிப்பூண்டியில் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பால பணி நடைபெற்று வருகிறது.

    ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், சிப்காட் தொழிலாளர்களும் பொது மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிக அளவில் விபத்துகளும் அப்பகுதியில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில துணை பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், சம்பத், ஜெகன், ஏழுமலை, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க. நிர்வாகிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மேம்பால பணியை விரைந்து முடிக்கக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    ஒரு வாரத்தில் லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் பா.ம.க. போராட்டம் நடத்தும் என டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #lokayukta

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்றும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஈடுபட்டிருக்கிறது. லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 83 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் அமைக்காதது ஈடு இணையற்ற மோசடி ஆகும்.

    இந்தியாவில் லோக் ஆயுக்தா சட்டம் 1971ஆம் ஆண்டில் முதன் முதலில் மராட்டிய மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டு, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பின், 47 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையில், தமிழகத்தில் இன்றுவரை லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்கள் லோக் ஆயுக்தா அமைப்புக்கு எந்த அளவுக்கு அஞ்சி, நடுங்கி, பின்வாங்கி வந்திருக்கின்றனர் என்பதை எளிதாக உணர முடியும்.

    இந்தியாவில் 22 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழகத்திலும் அத்தகைய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. கடந்த ஜூலை 9ஆம் தேதி சட்டப் பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் முழுமையான விவாதமின்றி, பெயரளவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அச்சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்ஆயுக்தா சட்டம், ஊழலை ஒழித்துவிடுமா? என்றால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அச்சட்டத்தில் ஏராளமான ஓட்டைகளும், குளறுபடிகளும் உள்ளன. அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களிலும் தான். ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு இல்லை. அதே போல், அரசு அலுவலகங்களில் நடை பெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் ஆயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வராத நிலையில், லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு தாமதப்படுத்தி வருகிறது.

    லோக்ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வலியுறுத்தினேன். ஆனால், பினாமி அரசு லோக்ஆயுக்தா அமைக்க துரும்பைக்கூட அசைக்க வில்லை.

    லோக்ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சிறை செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் தான் லோக்ஆயுக்தாவை பினாமி அரசு தாமதப்படுத்துகிறது. லோக்ஆயுக்தா சட்டத்தை இயற்றிவிட்டு லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது.

    தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் நிறை வேற்றப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைகின்றன. அதற்குள் அப்பழுக்கற்ற முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படாவிட்டால், சட்டம் இயற்றப்பட்டதன் 100வது நாளில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #lokayukta

    ×