search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    பாகூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    பாகூர் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் மேலண்ட வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 51). சுமை தூக்கும் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவர், சமீப காலமாக சரியாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவரது மனைவி ஜெயசித்ரா தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் நேற்று காலை ராமலிங்கம் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவரை கண்டித்து விட்டு ஜெயசித்ரா வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது அங்கு கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    கணவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்ததும் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×