search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரியில் மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
    X

    தருமபுரியில் மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி

    தருமபுரியில் வீடு கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரியை சேர்ந்தவர் பெருமாள் (வயது35). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் குமாரசாமிப் பேட்டை பகுதியில் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டார்.  நேற்றிரவு வீட்டின் மேல்பகுதியில் தொழிலாளர்களுடன் கான்கிரீட் போட்டு கொண்டிருந்தார். அப்போது கான்கிரீட் சரியாக போடப்பட்டுள்ளதா என்று பெருமாள் பார்த்து போது திடீரென மின்சாரம் எதிர் பாராத விதமாக தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படு காயம் ஏற்பட்டது.

    உடனே தொழிலாளர்கள் பெருமாளை மீட்டு தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அப்போது போகும் வழியிலேயே ஆம்புலன்சில் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×