search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம மரணம்
    X

    திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம மரணம்

    திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இவரும் பொன்மணி என்பவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பொன்மணி சம்பவத்தன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவர் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பொன்மணியின் தாய் அமராவதி நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருமணமாகி 7 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. ஜீவா மேல் விசாரணை நடத்தி வருகிறார். நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×