என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்7 Jan 2019 10:56 AM GMT (Updated: 7 Jan 2019 10:58 AM GMT)
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இவரும் பொன்மணி என்பவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பொன்மணி சம்பவத்தன்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பொன்மணியின் தாய் அமராவதி நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமணமாகி 7 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. ஜீவா மேல் விசாரணை நடத்தி வருகிறார். நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X