search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலி
    X

    பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலி

    பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
    பழனி:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சிக்கினாபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகன் சரண்ராஜ் (வயது 22).இவர் தாராபுரத்தில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (24),பிரசாந்த்(23), அருண்(22), சூர்யா(19), அஜித்(20), ரவி(22),ஜெகதீஷ் (21), ஆகிய 8 பேர்கள் பழனி அருகே உள்ள குதிரையாறு அணைக்கட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வந்தனர். பின்னர் மீண்டும் தாராபுரத்திற்கு புறப்பட்டனர். 4 மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சென்றனர்.

    பழனியிலிருந்து தாளையம் வழியாக தாராபுரம் செல்லும் சாலையில் சந்தன்செட்டிவலசு என்ற கிராமம் அருகே இவர்கள் சென்ற போது ரோட்டின் திருப்பத்தில் இருந்த பாறையில் சரண்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது. தொடர்ந்து வேகமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்களும் கட்டுபாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக அதே பாறையில் மோதியது. இந்த விபத்தில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கார்த்திக், பிரசாந்த் ஆகியோர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை கொண்டு செல்லப் பட்டனர். விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×