search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு
    X

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

    நாளை நடைபெற உள்ள ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார். #JactoGeo #HCMadurai
    மதுரை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் இன்று மதுரை ஐகோர்ட் டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு ஆஜ ரானார்.

    அப்போது அவர், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது.



    அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்வு பெரிதும் பாதிக்கும். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உங்கள் கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பிற்பகல் 1 மணிக்கு அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம் என்றனர். #JactoGeo #HCMadurai
    Next Story
    ×