என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் அமைச்சரிடம் கஜா புயல் நிவாரணத்திற்கு 13 கோடி ரூபாய் திரண்டது
Byமாலை மலர்25 Nov 2018 5:22 AM GMT (Updated: 25 Nov 2018 5:22 AM GMT)
முதல் அமைச்சரின் கஜா புயல் நிவாரணத்திற்காக 13 கோடி ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. #Gaja #GajaRelief
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
“கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.
வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளினை ஏற்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள், அரசியல் பிரமு கர்கள் பலர் நன்கொடை வழங்கினார்கள்.
மேலும் பொதுமக்களும் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை கிடைத்த தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாயாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
“கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.
வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளினை ஏற்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள், அரசியல் பிரமு கர்கள் பலர் நன்கொடை வழங்கினார்கள்.
மேலும் பொதுமக்களும் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை கிடைத்த தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாயாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X