search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
    X
    போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

    ஆணவக்கொலை நடந்த கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு சம்பவம்

    கிருஷ்ணகிரியில் காதல்-கலப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஷ், சுவாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. #HonourKilling
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ் (22), சுவாதி (19). காதல்-கலப்பு திருமணம் செய்து கொண்ட இவர்களை, சுவாதியின் பெற்றோர் மற்றும் உறவினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் கைதாகினர்.

    ஆணவக்கொலை நடந்து அந்த சூடு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்து உள்ளது.



    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த குருவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (33). இவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக கார் வைத்து ஊத்தங்கரையில் ஓட்டி வருகிறார்.

    கல்லாவியை அடுத்த வெங்கடதாம் பட்டியில் வசிப்பவர் செட்டிக்குமார். இவரது மகள் சுகன்யா (21) இவர் பி.எஸ்.சி. கணிதம் படித்துவிட்டு தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சிவகுமாருக்கும், சுகன்யாவுக்கும் நட்பு ஏற்பட்டு காதலாகி கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடந்த 16-ந் தேதி இருவரும் போச்சம்பள்ளி அருகே உள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில், அவர்களை, சுகன்யாவின் உறவினர்கள் தேடிவந்தனர். தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சிவகுமாரும், சுகன்யாவும் போச்சம்பள்ளி துணை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

    திருமணம் பதிவு செய்வதாக இருந்தது. நேற்று மதியம் மணமக்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பனங்காட்டூரில் இருந்து தங்கள் காரில் போச்சம்பள்ளி துணை பதிவாளர் அலுவலகம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, போச்சம் பள்ளி பிரதான சாலையில் வரும்போது அவர்களை இரண்டு கார்களில் சுகன்யாவின் உறவினர்கள் துரத்த ஆரம்பித்தனர்.

    சினிமா படம்போல் மணமக்கள் வந்த காரை முந்த நடந்த நிலையில் பிரதான சாலையில் இருந்த போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காரை உள்ளே விட்டு மணமக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேஷிடம் தஞ்சமடைந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் மணமக்கள் தஞ்ச மடைந்ததை கண்ட துரத்தி வந்த கும்பல் தங்கள் கார்களை திருப்பிக் கொண்டு பறந்தது.

    மணமக்களை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேஷ் மணமக்கள் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்துகொண்டு, இதுபற்றி விசாரணை நடத்த கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ் வாகனத்திலேயே அவர்களை அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம் செய்த ஜோடி மற்றும் மணமக்களின் உறவினர்கள் கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மணப்பெண் சுகன்யா வீட்டாரையும் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    ஏற்கெனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆணவக் கொலை ஒன்று நடந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தை போலீஸார் மிகவும் கவனமாக விசாரிக்கின்றனர். #HonourKilling
    Next Story
    ×