என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போதையால் விபரீதம் பாலத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
Byமாலை மலர்22 Nov 2018 11:56 AM GMT (Updated: 22 Nov 2018 11:56 AM GMT)
திண்டுக்கல் அருகே போதையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள சுரைக்காய்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகபாண்டி (வயது 36). இவர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொட்டமாயனூரில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார்.
பின்னர் மீண்டும் போதையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரில் மோதி 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதை பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முருகபாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திண்டுக்கல் அருகே உள்ள சுரைக்காய்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகபாண்டி (வயது 36). இவர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சொட்டமாயனூரில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார்.
பின்னர் மீண்டும் போதையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரில் மோதி 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதை பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முருகபாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X