search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருகம்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலி
    X

    விருகம்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலி

    விருகம்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போரூர்:

    விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருதாஸ். இவரது மனைவி ‌ஷகானா (28). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 5 வீடுகளில் இருந்து வரும் வாடகை வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர், குருதாஸ் மதுவிற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

    ‌ஷகானாவின் அக்கா கவிதாவிற்கும் குருதாசிற்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த ‌ஷகானா வீட்டிற்குள் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த ‌ஷகானாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ‌ஷகானா பரிதாபமாக உயிரிழந்தார்.

    Next Story
    ×