என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருகம்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலி
Byமாலை மலர்13 Nov 2018 6:06 AM GMT (Updated: 13 Nov 2018 6:06 AM GMT)
விருகம்பாக்கம் அருகே சொத்து தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருதாஸ். இவரது மனைவி ஷகானா (28). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 5 வீடுகளில் இருந்து வரும் வாடகை வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர், குருதாஸ் மதுவிற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
ஷகானாவின் அக்கா கவிதாவிற்கும் குருதாசிற்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த ஷகானா வீட்டிற்குள் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த ஷகானாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷகானா பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X