search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை
    X

    பாபநாசம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    பாபநாசம் அருகே மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கெலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயரசு(வயது 22). இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து வீட்டில் வி‌ஷப்பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

    இதுகுறித்து அவருடைய தாயார் வனிதா (37) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×