என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைரோடு அருகே மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி
Byமாலை மலர்23 Oct 2018 4:48 PM GMT (Updated: 23 Oct 2018 4:48 PM GMT)
கொடைரோடு அருகே சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.
கொடைரோடு:
கோவையில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி மதுரைக்கு சென்றது. பின்னர் அங்கு பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 45) என்பவர் ஓட்டினார். நேற்று மதியம் கொடைரோடு-செம்பட்டி சாலையில் பூதிப்புரம் என்ற பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியதுடன், சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இடிபாடுகளில் சிக்கி மோகன் உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மோகனின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் அவருடைய உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் மீட்க முடியவில்லை.
இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) விவேகானந்தன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி அவருடைய உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி மதுரைக்கு சென்றது. பின்னர் அங்கு பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 45) என்பவர் ஓட்டினார். நேற்று மதியம் கொடைரோடு-செம்பட்டி சாலையில் பூதிப்புரம் என்ற பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியதுடன், சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இடிபாடுகளில் சிக்கி மோகன் உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மோகனின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் அவருடைய உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் மீட்க முடியவில்லை.
இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) விவேகானந்தன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி அவருடைய உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X