என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் ஏறுமுகம்: பெட்ரோல் 19 காசு, டீசல் 31 காசு உயர்வு
Byமாலை மலர்6 Oct 2018 8:47 PM GMT (Updated: 6 Oct 2018 8:47 PM GMT)
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 89 காசுக்கு விற்பனையாகிறது. #FuelPrice
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு மாறியதில் இருந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி மத்திய-மாநில அரசுகள் வைக்காதா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசு வீதம் குறைத்தது.
அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் தந்தாலும், விலை குறைத்த மறுநாளில் இருந்து மீண்டும் அதன் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் 84 ரூபாய் 70 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 19 காசு உயர்ந்து, 84 ரூபாய் 89 காசுக்கு விற்பனை ஆனது. இதேநிலை நீடித்தால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-ஐ தொட்டுவிடும்.
இதேபோல், 77 ரூபாய் 11 காசுக்கு நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட டீசல், நேற்று 31 காசு அதிகரித்து, 77 ரூபாய் 42 காசுக்கு விற்பனை ஆனது. #PetrolDieselPrice
பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு மாறியதில் இருந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி மத்திய-மாநில அரசுகள் வைக்காதா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து இருக்கின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் 50 காசு வீதம் குறைத்தது.
அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் தந்தாலும், விலை குறைத்த மறுநாளில் இருந்து மீண்டும் அதன் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் 84 ரூபாய் 70 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 19 காசு உயர்ந்து, 84 ரூபாய் 89 காசுக்கு விற்பனை ஆனது. இதேநிலை நீடித்தால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-ஐ தொட்டுவிடும்.
இதேபோல், 77 ரூபாய் 11 காசுக்கு நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட டீசல், நேற்று 31 காசு அதிகரித்து, 77 ரூபாய் 42 காசுக்கு விற்பனை ஆனது. #PetrolDieselPrice
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X