என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்4 Oct 2018 3:11 PM GMT (Updated: 4 Oct 2018 3:11 PM GMT)
பெரம்பலூரில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 ஆடுகளும் கருகி இறந்தன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 38). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. அதில் ஆடுகளுக்கு தளை பறிப்பதற்காக சென்றார். அப்பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது மழைக்காக புளிய மரத்தடியின் கீழ் அறிவழகனும் அவரது மனைவி கலையரசியும் ஒதுங்கி நின்றனர். எதிர்பாரதவிதமாக அறிவழகன் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குன்னம் வட்டம் கோவில் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி நல்லம்மாள் (47). இவர் தனது வயலில் பயிரிட்டு இருந்த பருத்தி செடியில்களை எடுப்பதற்காக சென்றிருந்தார். அப்போது பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதற்கிடையே திடீரென அந்த பகுதியில் தாக்கிய இடியால் நல்லம்மாள் இறந்தார். குன்னம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அணைப்படி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 50) விவசாயி. இவர் சுமார் 100 ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வயலுக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றார் அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அங்குள்ள குடிநீர் ஏரிக்கரை ஓரத்தின் புளிய மரத்தடியின் கீழ் ஒதுங்கி நின்றது.
அதில் ஒதுங்கி நின்ற ஆடுகள் சில அருகிலுள்ள டிராக்டர் இணைப்பு இரும்பு பெட்டியில் கீழ் ஒதுங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மரத்தில் பட்டு பின்னர் அருகில் இருந்த டிராக்டர் இணைப்பு பெட்டியில் மின்னல் இறங்கியது.
அதில் இரும்பு பெட்டியின் கீழ் ஒதுங்கி நின்ற 12 ஆடுகள் கருகி இறந்தன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின்னல் தாக்கி பலியான ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் ஆகும். மேலும் கொளக்காநத்தம் கால்நடை மருத்துவர் ராஜேஷ் விரைந்து வந்து மின்னல் தாக்கி இறந்த ஆடுகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் பலியான ஆடுகள் தர்மராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X