search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வேன் டிரைவர் கைது
    X

    காரைக்குடி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வேன் டிரைவர் கைது

    காரைக்குடி அருகே இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் டெலி போன் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 31). இவர் கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துக்குமார் (21) என்பவர் மதில் சுவர் ஏறிக்குதித்து உமா மகேஸ்வரியை மானபங்கப்படுத்த முயன்றார்.

    உமா மகேஸ்வரி சத்தம் போடவே அவரை தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டார்.

    அவர் தப்பிச் செல்லும் போது இங்கு நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இது குறித்து உமா மகேஸ்வரி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் போது மணி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×