என் மலர்
நீங்கள் தேடியது "arrested van driver"
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் டெலி போன் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 31). இவர் கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துக்குமார் (21) என்பவர் மதில் சுவர் ஏறிக்குதித்து உமா மகேஸ்வரியை மானபங்கப்படுத்த முயன்றார்.
உமா மகேஸ்வரி சத்தம் போடவே அவரை தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டார்.
அவர் தப்பிச் செல்லும் போது இங்கு நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இது குறித்து உமா மகேஸ்வரி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் போது மணி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
களக்காடு:
தென்காசியில் இருந்து வள்ளியூருக்கு நேற்று இரவு ஒருஅரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை களக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக கீழபத்தையை சேர்ந்த சோமசுந்தரம்(42) என்பவர் இருந்தார்.
இந்நிலையில் பஸ் களக்காடு அருகே உள்ள குட்டுவன்குளம் அருகே வந்த போது மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பேருந்தின் பின்னால் கல்வீசி தாக்கினர். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து டிரைவர் பாலசுப்பிரமணியன் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கோவில் அம்மாள்பிரத்தை சேர்ந்த சேன் டிரைவர் சுடலைமணி, கிளீனர் செல்வகிருஷ்ணன் ஆகியோர் பஸ் மீது கல்வீசி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






