search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே 9-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
    X

    கோவை அருகே 9-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை

    கோவை அருகே 9-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தடாகம் ரோட்டை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் விஷாக் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள டுட்டோரியல் கல்லூரியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    விஷாக் சரியாக கல்லூரிக்கு படிக்க செல்வது இல்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவரை அவரது தாய் கண்டித்தாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷாக் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விஷாக்கை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஷாக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×