search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் இருந்து பாலக்காடு- திருச்சூருக்கு அரசு பஸ்கள் இயக்கம்
    X

    பழனியில் இருந்து பாலக்காடு- திருச்சூருக்கு அரசு பஸ்கள் இயக்கம்

    பழனியில் இருந்து கேரள மாநில பகுதிகளான பாலக்காடு, குருவாயூர், திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    பழனி:

    கேரள மாநில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள், பாலங்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்களில் பல கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகளையும் கேரள அரசு துரிதமாக மேற்கொண்டது. இதையடுத்து கேரள மாநிலம் மூணாறு தவிர மற்ற பகுதிகளான பாலக்காடு, குருவாயூர், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக பழனி கிளை அதிகாரிகளிடம் கேட்ட போது, பழனியில் இருந்து கேரள மாநில பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் மூணாறு தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் கேரளா, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. பகல் வேளையில் இயக்கப்படும் பஸ்கள் அட்டவணைப்படி வரத்தொடங்கியுள்ளன.

    இரவு நேர பஸ்கள் மட்டும் இன்னும் முறையாக இயக்கப்படவில்லை. விரைவில் அந்த பஸ்களும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேரளாவுக்கு குறைந்த அளவிலேயே பயணிகள் செல்கின்றன. ஓரிரு நாட்களில் சகஜமான நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் இணையதளம் மூலமாகவோ அல்லது போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு வந்தோ பஸ்களில் தங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என்றனர்.
    Next Story
    ×