search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் விளையாட்டில் மோதல்: மாணவர் கொலை வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் கைது
    X

    கிரிக்கெட் விளையாட்டில் மோதல்: மாணவர் கொலை வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் கைது

    கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாரப்பன் தெருவைச் சேர்ந்த அன்சாரி. இவரது மகன் அப்துல் கலாம்(14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று அப்துல் கலாம் தனது நண்பர்களுடன் காக்களூர் தனியார் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, வேடிக்கை பார்க்க வந்த மாணவர்கள் மீது பந்து விழுந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேம்புலி அம்மன் கோவிலை சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் அப்துல் கலாமிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினார்கள்.இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனே அவரது நண்பர்கள் அப்துல்கலாமின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் விரைந்து வந்து அப்துல் கலாமை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தந்தை அன்சாரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் கலாமை தாக்கிய வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 4 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். கைதான 4 பேரும் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×