search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக 3 டெம்போவில் கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டை பறிமுதல்
    X

    பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக 3 டெம்போவில் கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டை பறிமுதல்

    பெங்களூருவில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக கடத்தி வரப்பட்ட 150 குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    பெங்களூருவில் இருந்து கோவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக சூரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் பை-பாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் இருந்து வரும் அனைத்து வாகனத்தையும் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 மினி டெம்போ வேனை பிடித்து சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு வண்டியிலும் 50 மூட்டைகள் என மொத்தம் 150 மூட்டைகள் இருந்தது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நாங்கள் வாடகைக்கு சென்றோம். இந்த மூட்டைகளை சேலம் மெய்யனூரை சேர்ந்த மாதேஸ் என்பவர் அனுப்பி வைத்ததாக கூறினர். இதையடுத்து போலீசார் மாதேஸ் என்பவரை பிடித்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கு செல்கிறது? யாருக்கு செல்கிறது? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×