search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியங்குடி, கடையநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
    X

    புளியங்குடி, கடையநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    புளியங்குடி மற்றும் கடையநல்லூர் பகுதியில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
    கடையநல்லூர்:

    புளியங்குடி, வீரசிகாமணி மற்றும் கடையநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேல புளியங்குடி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில், வென்றிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி, கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், நயினாரகரம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. 

    இந்த தகவலை, கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×