search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுகுடித்துவிட்டு மயங்கி கிடந்த அரசு ஊழியரிடம் பணம்- செல்போன் திருட்டு
    X

    மதுகுடித்துவிட்டு மயங்கி கிடந்த அரசு ஊழியரிடம் பணம்- செல்போன் திருட்டு

    மதுகுடித்துவிட்டு மயங்கி கிடந்த அரசு ஊழியரிடம் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் ராம்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது51). இவர் கடற்கரை சாலையில் உள்ள புதுவை சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இவர் தவளக்குப்பத்தில் உள்ள சாராயகடையில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு அருகில் உள்ள மைதானத்தில் மயங்கி போனார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் யாரோ முருகன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    போதை தெளிந்த பின்னர் முருகன் சட்டை பையை பார்த்த போது பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகனிடம் பணம் மற்றும் செல்போனை திருடிசென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×