என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியால் உயிர் தப்பினேன்- விபத்தில் சேதமடைந்த ஆட்டோவின் டிரைவர் பேட்டி
Byமாலை மலர்1 Aug 2018 9:57 AM GMT (Updated: 1 Aug 2018 9:57 AM GMT)
கோவையில் நடந்த விபத்தின் போது சற்று தூரத்தில் நின்று மனைவியுடன் செல்போனில் பேசியதால் தான் உயிர் தப்பியதாக ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.
கோவை:
கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி 8 பேர் பலியானார்கள். கார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த ஆட்டோவின் உரிமையாளர் சுந்தராபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆவார். இவர் விபத்தை நேரில் பார்த்தவர். இது குறித்து அவர் கூறியதாவது-
விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் நான் எனது ஆட்டோவில் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் எனது மனைவி செல்போனில் அழைத்தார்.
இதனால் நான் ஆட்டோவில் இருந்து வெளியே வந்து சற்று தூரத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தேன். எனது நண்பர் ஆட்டோவில் உட்கார்ந்து இருந்தார்.
நான் எனது மனைவியுடன் செல்போனில் பேசியதால் உயிர் தப்பினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயணிகள் மற்றும் ஆட்டோ மீது மோதி சொகுசு கார் அதன் பின்னரும் கட்டுக்குள் வரவில்லை. அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில் மின்கம்பம் உடைந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பொக்லின் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. #tamilnews
கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி 8 பேர் பலியானார்கள். கார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த ஆட்டோவின் உரிமையாளர் சுந்தராபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆவார். இவர் விபத்தை நேரில் பார்த்தவர். இது குறித்து அவர் கூறியதாவது-
விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் நான் எனது ஆட்டோவில் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் எனது மனைவி செல்போனில் அழைத்தார்.
இதனால் நான் ஆட்டோவில் இருந்து வெளியே வந்து சற்று தூரத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தேன். எனது நண்பர் ஆட்டோவில் உட்கார்ந்து இருந்தார்.
அந்த சமயத்தில் தான் சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி விட்டு எனது ஆட்டோவிலும் மோதியது. சத்தம் கேட்டு நான் அங்கு விரைந்து சென்றேன். அதிர்ஷ்டவசமாக எனது நண்பர் காயம் இன்றி தப்பினார்.
நான் எனது மனைவியுடன் செல்போனில் பேசியதால் உயிர் தப்பினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயணிகள் மற்றும் ஆட்டோ மீது மோதி சொகுசு கார் அதன் பின்னரும் கட்டுக்குள் வரவில்லை. அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில் மின்கம்பம் உடைந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பொக்லின் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X