search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக டாக்டர் புகார்- 3 பேர் மீது வழக்கு
    X

    கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக டாக்டர் புகார்- 3 பேர் மீது வழக்கு

    கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம் கோமதிபுரம் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் பூர்ண பிரியா (வயது 32). தனியார் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். விவாகரத்து பெற்ற பூர்ண பிரியா, 2-வது திருமணத்திற்காக தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    அதன்மூலம் ராஜீவ் கண்ணா (32) என்பவர் தொடர்பு கொண்டார். அவருக்கும் பூர்ண பிரியாவுக்கும் கடந்த 1-ந் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஜூன் 3-ந்தேதி மேலும் ரூ.25 லட்சம் வேண்டும் என ராஜீவ் கண்ணா கேட்டதோடு திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் டாக்டர் பூர்ண பிரியா புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜீவ் கண்ணா, அவரது தந்தை பாலமுருகேசன் (62), தாயார் புஷ்பம் (60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×