என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நாளை விடுமுறை - ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கும்
Byமாலை மலர்24 July 2018 10:03 AM GMT (Updated: 24 July 2018 10:03 AM GMT)
லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை விடுமுறை அறிவித்துள்ளதால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LorryStrike
ஒட்டன்சத்திரம்:
தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையாகும். இங்கிருந்து கேரளா, மகாராஷ்ட்ரா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் வியாபாரிகளால் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை (25-ந்தேதி) விடுமுறை என காந்தி காய்கறி மார்க்கெட் உரிமையாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் லாரிகள் உரிமையாளர் நலச்சங்கம், வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆகிய சங்கங்கள் விடுமுறையில் பங்கேற்கும். நாளை நடைபெறும் கடை அடைப்பினால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LorryStrike
தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையாகும். இங்கிருந்து கேரளா, மகாராஷ்ட்ரா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் வியாபாரிகளால் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை (25-ந்தேதி) விடுமுறை என காந்தி காய்கறி மார்க்கெட் உரிமையாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் லாரிகள் உரிமையாளர் நலச்சங்கம், வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆகிய சங்கங்கள் விடுமுறையில் பங்கேற்கும். நாளை நடைபெறும் கடை அடைப்பினால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LorryStrike
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X