search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அச்சம்புதூர்- ஊத்துமலையில் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை
    X

    அச்சம்புதூர்- ஊத்துமலையில் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை

    அச்சம்புதூர் மற்றும் ஊத்துமலையில் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அச்சம்புதூரை சேர்ந்தவர் கருணாச்சல பாண்டி (வயது 34).  தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக தெரிகிறது.  

     இந்நிலையில் நேற்று இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி மாரிதுரைச்சி புகாரின்பேரில் அச்சம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துமலையை சேர்ந்தவர் முருகையா(53). தொழிலாளி. இவர் நேற்று தோட்டத்து வேலைக்கு சென்றார்.  திடீரென அங்குள்ள கிணற்று கல்லில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×