search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு பற்றிய தீர்ப்பு - கி.வீரமணி வரவேற்பு
    X

    நீட் தேர்வு பற்றிய தீர்ப்பு - கி.வீரமணி வரவேற்பு

    நீட் தேர்வு பற்றிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KVeeramani #Neetexam

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வரவேற்கத்தக்க மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நீதி இது. கருணை மதிப்பெண்கள் என்பதை விட நியாயமாக அளிக்கப்பட வேண்டிய மதிப்பெண்களே இவை என்பதுதான் சரியானது.

    மேல்முறையீடு என்று கூறி, இந்த நியாயமான, மனிதாபிமான தீர்ப்பைப் புறந்தள்ளும் முயற்சியில் சி.பி.எஸ்.இ. ஈடுபடக் கூடாது என்பதே சமூக நீதி யாளர்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பமும், கருத்துமாகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #KVeeramani #Neetexam

    Next Story
    ×