search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தான் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி
    X

    தான் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி

    தான் வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டிய ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததால், மாணவியின் உறவினர்கள் ஆசிரியரை கடுமையாக தாக்கினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் மேட்டூர் சாலையில் உள்ள தனியார் டுடோரியல் கல்லூரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

    இந்நிலையில் இங்கு படித்து வரும் 10ஆம் வகுப்பு மாணவி, தனக்கு பாடம் நடத்தும் சுந்தரம் என்ற ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து 4 வாலிபர்கள் அங்கு சென்று ஆசிரியரை அடித்து உதைத்துள்ளனர்.

    தகவலறிந்த அங்கு வந்த போலீசார் ஆசிரியரை பத்திரமாக மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஆசிரியரிடம், மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவி ஒருவரை காதலித்ததும், அது ஆசிரியருக்கு தெரியவரவே வீட்டிற்கு தெரிவித்து விடுவதாக மிரட்டியிருக்கிறார். இதை திசை திருப்புவதற்காக மாணவி ஆசிரியரை உறவினர்களிடம் சிக்க வைத்தது தெரியவந்தது. 

    இதில் காயமடைந்த ஆசிரியர் சுந்தரம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கூறிய சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×