search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போதாது - எம்.எஸ்.சுவாமிநாதன்
    X

    விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போதாது - எம்.எஸ்.சுவாமிநாதன்

    விவசாய உற்பத்தி பொருட்கள் கொள்முதலில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவநாமிநாதன் தெரிவித்துள்ளார். #MSPHike ##MSSwaminathan
    சென்னை:

    வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவநாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெல் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இது விவசாய நெருக்கடியை குறைக்கும்.

    மத்திய அமைச்சரவை விவசாயிகளின் பொருளாதார பிரச்சனைகளை அங்கீகரித்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாக்களை அறிவித்துள்ளது.

    விவசாயிகளுக்கு சந்தை ஆதரவு தேவை என்பதால், அந்தக் கொள்கை மூன்று ஒருங்கிணைந்த கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

    குறைந்தபட்ச ஆதரவு விலை. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதை உறுதி செய்ய சாதகமான கொள்முதல் கொள்கையை கொண்டு வரவேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டம், பள்ளி மதிய உணவுத் திட்டம் முதலியன திறம்படச் செயல்படுத்துவதன் மூலம் நுகர்வு அதிகரிக்கும்.

    அரசு வெளியிட்ட அறிவிப்பு பின்வரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.

    குறைந்தபட்ச ஆதரவு விலையானது முழுமையான விதிமுறைகளில் அதிகமாக உள்ளது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு கீழே உள்ளது.

    அதிகபட்ச எம்.எஸ்.பிக்கள் (குறைந்தபட்ச ஆதரவு விலை) வரவேற்கப்படுகின்றன. ஆனால் கோதுமை, அரிசி ஆகியவற்றில் தவிர்த்து, மசோதாவில் பொது மக்களின் கொள்முதல் எம்.எஸ்.பி. (குறைந்த பட்ச ஆதரவு விலை) போதுமானதாக இல்லை.

    கொள்முதல் எதிர்பார்ப்பில் அதிக பருப்புகளை பயிரிட்ட விவசாயிகளின் அனுபவத்தில் இருந்து இது தெளிவாகிறது. ஆனால் சந்தை விலைகளில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    உண்மையில் பல பயிர்களுக்கு உளுந்து, மைதா, துவரம் பருப்பு, சோளம், நிலக்கடலை, சோயாபீன், கடுகு, எண்ணெய் வித்து பயிரான ஆகியவை பருவ மழைக்கு முந்தைய சராசரி மார்க்கெட்டின் விலையானது அதனுடன் தொடர்புடைய குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே இருந்தது.

    விவசாயிகளுக்கு தேசிய ஆணையம் பரிந்துரை செய்யப்பட்ட பிற நடவடிக்கைகளும், வருவாய் நிலைத்தன்மையும், மொத்த வருமானமும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

    ஆக, அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அறிவிப்பது, விவசாய நெருக்கடியை மீறுவதற்கான செயல்முறையின் முதல் படியாகும். குறிப்பாக கொள்முதல் மற்றும் சேமிப்பகத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டபடி இதில் மேலும் அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MSPHike ##MSSwaminathan
    Next Story
    ×