என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரி
Byமாலை மலர்3 July 2018 1:46 PM GMT (Updated: 3 July 2018 1:46 PM GMT)
திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி:
பொன்னீஸ்வரி தஞ்சையில் கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் உதய குமாருக்கும், தஞ்சையை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
இதையறிந்த பொன்னீஸ்வரி தனது கணவரை சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் உதயகுமார் மகாலட்சுமியுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உதயகுமாரும், மகாலட்சுமியும் சேர்ந்து பொன்னீஸ்வரியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை கைது செய்தார். தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X