search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரி
    X

    திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரி

    திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னீஸ்வரி (வயது 40). இவருக்கும் தஞ்சாவூர் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வியாபாரி, உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    பொன்னீஸ்வரி தஞ்சையில் கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் உதய குமாருக்கும், தஞ்சையை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதையறிந்த பொன்னீஸ்வரி தனது கணவரை சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் உதயகுமார் மகாலட்சுமியுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உதயகுமாரும், மகாலட்சுமியும் சேர்ந்து பொன்னீஸ்வரியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை கைது செய்தார். தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகிறார்.
    Next Story
    ×