search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி பாலியல் பலாத்காரம்: போஸ்கோ சட்டத்தில் முதியவர் கைது
    X

    சிறுமி பாலியல் பலாத்காரம்: போஸ்கோ சட்டத்தில் முதியவர் கைது

    வாடிப்பட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் (வயது 58) என்பவர் மிட்டாய் வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் போஸ்கோ சட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த பெருமாளை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×