என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே தலை துண்டித்த நிலையில் வாலிபர் உடல்: கொலையா? போலீசார் விசாரணை
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் - மதுரை ரெயில் மார்க்கத்தில் காந்தி கிராம பல்கலைக்கழகம் அருகே சுரங்கப்பாதையில் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் செட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் தர்மராஜ் (வயது 25) என தெரியவந்தது. லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந் நிலையில் அவர் இறந்து கிடப்பதாக அறிந்ததும் உறவினர்கள் அங்கு வந்து கதறி அழுதனர். அவர் ரெயிலில் அடிபட்டு இறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் தலை வெட்டப்பட்டது போல தனியாக வேறொரு இடத்தில் கிடந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்