search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் கார் மோதி டிஆர்ஓ டபேதார் பலி
    X

    தஞ்சையில் கார் மோதி டிஆர்ஓ டபேதார் பலி

    தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டி.ஆர்.ஓ. டபேதார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆர்.டி.ஓ.வாக பணியாற்றுபவர் சுரேஷ். இவரது டபேதாராக பணியாற்றியவர் ஆறுமுகம் (வயது 53).இவர் தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 18-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றார். குழந்தை ஏசு கோயில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இதில் தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்த டபேதார் ஆறுமுகம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுபற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×